VideoCapture 20211102 110454
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் தரப்புகள் ஒன்றிணைவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

Share

தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புக்கள் தேர்தல் உட்பட அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் தற்போது மிக வேகமாக உணரப்பட்டு உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடமும் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது – எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாமை தொடர்பாக ஊடகங்கள் அவரிடம் கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

அடையாள ரீதியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் அவர்கள் பங்குபற்றவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் நாங்கள் இவ்வாறான சந்திப்புகளை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம் – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...