VideoCapture 20211102 110454
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் தரப்புகள் ஒன்றிணைவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

Share

தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புக்கள் தேர்தல் உட்பட அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் தற்போது மிக வேகமாக உணரப்பட்டு உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடமும் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது – எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாமை தொடர்பாக ஊடகங்கள் அவரிடம் கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

அடையாள ரீதியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் அவர்கள் பங்குபற்றவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் நாங்கள் இவ்வாறான சந்திப்புகளை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம் – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...