6757
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளை முதல் மாகாணங்களிடையே ரயில், பஸ் சேவைகள் ஆரம்பம்

Share

நாளை முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை திட்டமிட்டுள்ளன.

அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

சுகாதார விதிமுறைகளின் படி சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றிருத்தல் வேண்டும், முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்றவற்றை கடைப்பிடித்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் 152 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

பயணிகள் வசதிக்காகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்வே திணைக்களம் அதிக ரயில்களை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக தமது பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...