9
இலங்கைசெய்திகள்

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என்ற யாழ் எம்.பி : தென்னிலங்கையில் கிளம்பிய சர்ச்சை

Share

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என்ற யாழ் எம்.பி : தென்னிலங்கையில் கிளம்பிய சர்ச்சை

பதவி விலகிய முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilangumaran) தெரிவித்த கருத்துக்கள் தென்னிலங்கையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலி கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ரன்வெல சமீபத்தில் பதவி விலகினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த க.இளங்குமரன், “இல்லை, இந்த வைத்தியர் பட்டம் அவரால் வழங்கப்படவில்லை, மக்களால் உருவாக்கப்பட்டது.

அவர் 1989 இல் ஜப்பானுக்குச் சென்றார், மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஜப்பானில் மருத்துவம் படித்தார்.

அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, நாடாளுமன்ற சபாநாயகராக மருத்துவ முனைவர் பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயத்தை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...