15 28
இலங்கைசெய்திகள்

சி.ஐ.டிக்கு விரைந்த திசைக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்

Share

சி.ஐ.டிக்கு விரைந்த திசைக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathna), தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் போலிச் செய்திகள் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற கூற்றுக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்தவர்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீங்கிழைக்கும் மற்றும் தவறான செய்திகள் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இவ்வாறான விடயங்கள் மூலம் பெண்கள் அரசியலில் இணைவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா கூறியுள்ளார்.

இதுபோன்ற இழிவான தந்திரோபாயங்கள் பெண்கள் அரசியலில் சேருவதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்த தந்திரங்களால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...