04
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய துணைத் தூதரகத்தால் “ஒற்றுமைக்கான மிதிவண்டி” பயணம்

Share

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது.

இதன்போது யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் , தூதரகத்திலிருந்து மிதிவண்டியில் பயணித்து நாவற்குழி பகுதியில் சிவபூமி அறக்கட்டளையின் கீழ் அமைந்துள்ள சிவபூமி (தட்சணாமூர்த்தி) கோவிலை அடைந்தனர்.

அங்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொட்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜை வரவேற்றார்.

தொடர்ந்து “உலகம் ஒரு குடும்பம் எனும் வசுதைவ குடும்பகத்தின்” வழிகாட்டுதலின் பேரில், இந்திய துணைத் தூதுவர் துணைத் தூதரகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக சிறப்பு வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 01 02

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....