04
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய துணைத் தூதரகத்தால் “ஒற்றுமைக்கான மிதிவண்டி” பயணம்

Share

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது.

இதன்போது யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் , தூதரகத்திலிருந்து மிதிவண்டியில் பயணித்து நாவற்குழி பகுதியில் சிவபூமி அறக்கட்டளையின் கீழ் அமைந்துள்ள சிவபூமி (தட்சணாமூர்த்தி) கோவிலை அடைந்தனர்.

அங்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொட்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜை வரவேற்றார்.

தொடர்ந்து “உலகம் ஒரு குடும்பம் எனும் வசுதைவ குடும்பகத்தின்” வழிகாட்டுதலின் பேரில், இந்திய துணைத் தூதுவர் துணைத் தூதரகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக சிறப்பு வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 01 02

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...