செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Share

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,

” வழமையாக வெளிநாட்டு தூதுவர்களை, அமைச்சர்கள் தமது அமைச்சுக்கு அழைத்தே பேச்சு நடத்துவார்கள். விளக்கம் கோருவார்கள். இதுவே இராஜதந்திர நடைமுறை. ஆனால் இந்த அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தூதுவர்களை நாடி, தூதரகங்களுக்கே சென்று சந்திப்புகளை நடத்துகின்றனர். இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் வாங்கிய விவகாரம் இராஜதந்திர நடவடிக்கை அல்ல. நிலைமை இவ்வாறிருக்கையில், இதனை இராஜதந்திர பிரச்சினையாக காண்பிப்பதற்கு அரசு முற்படுகின்றது.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சீனா என்பது எமக்கு மிக முக்கிய நாடு. தடுப்பூசி உட்பட பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. உரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து உறவை கணிக்கமுடியாது. தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாறாக தூதுவர் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...