செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Share

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,

” வழமையாக வெளிநாட்டு தூதுவர்களை, அமைச்சர்கள் தமது அமைச்சுக்கு அழைத்தே பேச்சு நடத்துவார்கள். விளக்கம் கோருவார்கள். இதுவே இராஜதந்திர நடைமுறை. ஆனால் இந்த அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தூதுவர்களை நாடி, தூதரகங்களுக்கே சென்று சந்திப்புகளை நடத்துகின்றனர். இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் வாங்கிய விவகாரம் இராஜதந்திர நடவடிக்கை அல்ல. நிலைமை இவ்வாறிருக்கையில், இதனை இராஜதந்திர பிரச்சினையாக காண்பிப்பதற்கு அரசு முற்படுகின்றது.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சீனா என்பது எமக்கு மிக முக்கிய நாடு. தடுப்பூசி உட்பட பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. உரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து உறவை கணிக்கமுடியாது. தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாறாக தூதுவர் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...