செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Share

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,

” வழமையாக வெளிநாட்டு தூதுவர்களை, அமைச்சர்கள் தமது அமைச்சுக்கு அழைத்தே பேச்சு நடத்துவார்கள். விளக்கம் கோருவார்கள். இதுவே இராஜதந்திர நடைமுறை. ஆனால் இந்த அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தூதுவர்களை நாடி, தூதரகங்களுக்கே சென்று சந்திப்புகளை நடத்துகின்றனர். இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் வாங்கிய விவகாரம் இராஜதந்திர நடவடிக்கை அல்ல. நிலைமை இவ்வாறிருக்கையில், இதனை இராஜதந்திர பிரச்சினையாக காண்பிப்பதற்கு அரசு முற்படுகின்றது.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சீனா என்பது எமக்கு மிக முக்கிய நாடு. தடுப்பூசி உட்பட பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. உரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து உறவை கணிக்கமுடியாது. தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாறாக தூதுவர் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...

gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...