sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சஜித்

Share

” நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 ஆம் நிலையியற்கட்டளையின்கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரிசிக்கு வரிசை, சீனிக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை, சமையல் எரிவாயுவுக்கு வரிசை என அந்தப்பட்டியல் நீள்கின்றது.

மாற்றத்துக்காகவே 69 லட்சம் பேர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? மீண்டும் 70-77 யுகத்தை நோக்கி மக்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.” -என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...