25 12
இலங்கைசெய்திகள்

திருமண மண்டபத்திற்குள் நடந்த ஒழுக்ககேடான நிகழ்வு – 200 இளைஞர், யுவதிகளின் செயல்

Share

திருமண மண்டபத்திற்குள் நடந்த ஒழுக்ககேடான நிகழ்வு – 200 இளைஞர், யுவதிகளின் செயல்

கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

போதைப்பொருள் விருந்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையல், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே இவ்வாறு கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கடற்கரையோரங்களில் இவ்வாறான ஒழுக்ககேடான நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது மண்டபங்களை ஒழுங்கு செய்தும் நடத்தும் அளவுக்கு மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிகழ்வுகளில் பிள்ளைகள் கலந்து கொள்வது குறித்து பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை மாத்தறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் விருந்து ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

சுமார் 600இற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது போதைப்பொருளுடன் 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...