back
இலங்கைசெய்திகள்

பணபரிமாற்றத்துக்கு புதிய செயலி – மத்திய வங்கியால் அறிமுகம்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியால் புதிய கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட இந்தப் புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பணம் அனுப்புதலை ஊக்குவிக்க புதிய பணம் அனுப்பு முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பு முறைகள் பற்றி பரிந்துரைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி குழு ஒன்றை நியமித்துள்ளது.

இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கார்கில்ஸ் வங்கி , டயலொக், மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியினர் நிபுணர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

இந்தச் செயலியில் அந்நியச் செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங்களைச் செலுத்தல் போன்ற பல சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் லங்கா கிளியர் போன்ற பங்குதாரர்களின் உதவியுடன் இந்தச் செயலி செயற்படுத்தப்படுகிறது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....