back
இலங்கைசெய்திகள்

பணபரிமாற்றத்துக்கு புதிய செயலி – மத்திய வங்கியால் அறிமுகம்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியால் புதிய கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட இந்தப் புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பணம் அனுப்புதலை ஊக்குவிக்க புதிய பணம் அனுப்பு முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பு முறைகள் பற்றி பரிந்துரைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி குழு ஒன்றை நியமித்துள்ளது.

இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கார்கில்ஸ் வங்கி , டயலொக், மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியினர் நிபுணர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

இந்தச் செயலியில் அந்நியச் செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங்களைச் செலுத்தல் போன்ற பல சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் லங்கா கிளியர் போன்ற பங்குதாரர்களின் உதவியுடன் இந்தச் செயலி செயற்படுத்தப்படுகிறது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....