prese scaled
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

Share

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துள்ளார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 2ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர், மறுநாள் காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், திருகோணமலைக்கும் விஜயம் செய்து எண்ணெய்க் குதங்களையும் பார்வையிட்டிருந்தார்.

தொடர்ந்து அன்றைய தினமே யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் பல தரப்பினரையும் சந்தித்திருந்ததுடன், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களையும் பார்வையிட்டுச் சென்றிருந்தார்.

இதேவேளை, நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரையும், இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துப் பேசியிருந்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்திய வெளிவிவகாரச் செயலருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

presiden scaled

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...