Rohitha Rajapaksa Image 1200x900 1 scaled
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தலில் ரோஹித்த!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை நிராகரிக்கவில்லை.

இந்த நிலையில், ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், வடமேல் மாகாணத்தை இலக்கு வைத்து களமிறங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, ரோஹித்த ராஜபக்ஸ களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே, ரோஹித்த ராஜபக்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல் வைத்தியசாலையில் நிலவிய பிரச்சினைகளுக்கும், ரோஹித்த ராஜபக்ஸ அண்மையில் தீர்வை பெற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க எதிர்பார்த்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாசிறி ஜயசேகர முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...