Rohitha Rajapaksa Image 1200x900 1 scaled
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தலில் ரோஹித்த!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை நிராகரிக்கவில்லை.

இந்த நிலையில், ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், வடமேல் மாகாணத்தை இலக்கு வைத்து களமிறங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, ரோஹித்த ராஜபக்ஸ களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே, ரோஹித்த ராஜபக்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல் வைத்தியசாலையில் நிலவிய பிரச்சினைகளுக்கும், ரோஹித்த ராஜபக்ஸ அண்மையில் தீர்வை பெற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க எதிர்பார்த்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாசிறி ஜயசேகர முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...