AIR 2 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு விசேட நடைமுறை!

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டுக்குள் நுழைய முன்னர் புறப்படும் இடத்தில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனில் விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை எனவும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையாகும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் இலங்கையை வந்தடைந்த பின் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புறப்படும் நாட்டில் 72 மணிநேரத்துக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றில்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...