AIR 2 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு விசேட நடைமுறை!

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டுக்குள் நுழைய முன்னர் புறப்படும் இடத்தில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனில் விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை எனவும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையாகும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் இலங்கையை வந்தடைந்த பின் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புறப்படும் நாட்டில் 72 மணிநேரத்துக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றில்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...