சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய சபாநாயகர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரின்...
இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை...
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகையில், புதிய கொரோனா...
வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்...
இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள்...
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு...