tamilnig 11 scaled
இலங்கைசெய்திகள்

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

Share

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

கனேடியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பழகிய பாகிஸ்தான் உளவுப் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கூறிவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வரும், சத்யேந்திர சிவால் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர், கனடாவில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் இணையத்தளம் வாயிலாக பழகிவந்த நிலையிலேயே, இந்திய இராணுவம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பான இரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கினால் அதற்கு பதிலாக பெருந்தொகை பணத்தை தருவதாக அந்த பெண் கூற, சிலர் குறித்த இரகசியங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றை அறிந்த இந்திய பொலிஸார், தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக இந்தியாவுக்கு வந்த சிவாலை லக்னோவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதேவேளை, சிவாலை ஏமாற்றிய பெண் கனேடியர் அல்ல எனவும் அவர் பாகிஸ்தான் உளவு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் இந்திய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...