24
செய்திகள்இலங்கை

அனைத்து வீடுகளுக்கும் ஆயுள்வேத மருந்து!

Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுள்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தையொட்டி கொரோனாத் தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு சகல வீடுகளுக்கும் உள்ளூர் மருந்துப்பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என  அவர் கூறியுள்ளார்.

இம் மருந்துப் பெட்டியில் ஆயுள்வேத மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் நோய் தடுப்பு பானம் மற்றும் மூலிகைப்பொடி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் உள்ளடங்கிய பெட்டியானது முதலில் நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து விநியோகிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...