21 614bfbba53d25
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

Share

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார் .

அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வரும் நபரொருவர் நேற்றையதினம் சிறுவனை தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

அண்மைக்காலமாக பளையில் வசித்துவரும் நபரொருவர் அதிகமானவர்களுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பளை பொலிஸ் நிலையத்தில் அவர் மீது அதிகமான வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் (22) குறித்த நபர் சிறுவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஆத்திரத்தில் நியாயம் கேட்க சென்றுள்ளான். இதன்போதே குறித்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது .

இத் தாக்குதலில் சிறுவனின் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டியினூடாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 614bfbba3e074

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...