prasanna gunasena 696x392444 1
செய்திகள்இலங்கை

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

Share

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது

இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் இளைஞர்கள் அக்கறை செலுத்தாதுள்ளனர். இதனால் அவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளாத நிலை காணப்பட்டாலும் , அவர்களால் சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதன் மூலமாக புதிய திரிபுடன் வைரஸ்கள் உண்டாகலாம். அவற்றை தடுப்பூசிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படலாம்.

அவற்றை கருத்து கொண்டே வைரஸ் திரிபுகளின் உருவாக்கத்தைக் குறைக்க உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை செலுத்துமாறு பரிந்துரைத்துள்ளது – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...