WhatsApp Image 2021 09 20 at 18.40.31 scaled
செய்திகள்இலங்கை

நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்!! – ஹரின் கிண்டல்

Share

பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர். ஆனால் இங்கு மட்டும்  அரசாங்கம் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேதடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி வழங்குவதில் நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

நாட்டில் இன்று சீனி இல்லை, மா இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கழிப்பறைகளும் இல்லை. வாகன உதிரிப்பாகங்கள் இல்லை.

நாட்டுக்குள் கொரோனா வைரஸுடன் பரவியுள்ள மிகப்பெரிய வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டுள்ளோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து நுழைந்துள்ள வைரஸ், யானைக் கடத்தலில் இருந்து நுழைந்துள்ள வைரஸ் மற்றும் உரங்களிலிருந்து நுழைந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர்காலத்தில் முன்வைக்கிறோம்.

மேற்கூறிய அனைத்து வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தவை. எங்கள் நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளன.

இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும். நாட்டு மக்களை முடக்கத்தில் தவிக்கவிட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றன.

நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லவில்லை. தனது சொந்த ஊருக்கே அவர் சென்றுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...