WhatsApp Image 2021 09 20 at 18.40.31 scaled
செய்திகள்இலங்கை

நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்!! – ஹரின் கிண்டல்

Share

பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர். ஆனால் இங்கு மட்டும்  அரசாங்கம் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேதடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி வழங்குவதில் நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

நாட்டில் இன்று சீனி இல்லை, மா இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கழிப்பறைகளும் இல்லை. வாகன உதிரிப்பாகங்கள் இல்லை.

நாட்டுக்குள் கொரோனா வைரஸுடன் பரவியுள்ள மிகப்பெரிய வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டுள்ளோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து நுழைந்துள்ள வைரஸ், யானைக் கடத்தலில் இருந்து நுழைந்துள்ள வைரஸ் மற்றும் உரங்களிலிருந்து நுழைந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர்காலத்தில் முன்வைக்கிறோம்.

மேற்கூறிய அனைத்து வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தவை. எங்கள் நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளன.

இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும். நாட்டு மக்களை முடக்கத்தில் தவிக்கவிட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றன.

நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லவில்லை. தனது சொந்த ஊருக்கே அவர் சென்றுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...