637510547761645993Basmati rice with a spoon square
செய்திகள்இலங்கை

அதிகரிக்கிறது அரிசி விலை!!!

Share

நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன நாடளாவிய ரீதியில் பரவலாக கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி அரிசி விலை தொடர்பில் அரசால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி சம்பா அரிசி ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், கீரி சம்பா 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசிக்கு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...