2026 07 15T164046Z 166059555 RC2FEMAX5LOJ RTRMADP 3 UKRAINE CRISIS ATTACK ZAPORIZHZHIA 1784160211
உலகம்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் – இழப்புக்கள் தொடர்பில் மொஸ்கோ வெளியிட்டுள்ள தகவல்கள்.

Share

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மொஸ்கோவில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், இத்தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளைக் குறிவைத்து உக்ரைன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் உள்ள வணிக நிறுவனம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெல்கோரோட் நகருக்கு வெளியே உள்ள பிறிதொரு நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஷெபெகினோ நகரில் பேருந்து ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த 19 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...