ஈரானுக்கு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை என ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஓமானுடன் படிப் படியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில், “அமெரிக்கா தான் விரும்பும் போதெல்லாம் சண்டையிடுவதற்கும், விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கும் நாம் அதனை பழக்கப்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை ஈரான் அங்கீகரிக்காது என்பதனை மீண்டும் வலியுறுத்திய அவர், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் ஈரானின் பொறுப்பிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.