24 662f0411a01d0
இலங்கைஏனையவைசெய்திகள்

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

Share

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

இலங்கை இளைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி நிகழ்ச்சி ஒன்றின் குரல் தெரிவு சுற்றில் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞரே இவ்வாறு இசை போட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர இரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை திறமையாக பாடியதை பார்த்தும் கேட்டும் இசை அரங்கமே ஆர்ப்பரித்தது.

இந்திரஜித் குறித்த போட்டியில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடியதுடன், நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

முன்னதாக மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று குறித்த தென்னிந்திய இசை நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அசானியையடுத்து, தாய்மண்ணுக்கு பெருமை சேர்ப்பதற்காக இசை மேடையேறியிருக்கும் இந்திரஜித்தின் இந்த இசை முயற்சி பலரால் பேசப்படுகிறது.

மேலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிசா தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...