tamilni 148 scaled
ஏனையவை

பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள்

Share

பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள்

இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை ஆதரிக்கும் இஸ்லாமிய குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் பிரித்தானியாவில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரகசிய விசாரணை “ஹிஸ்புத் தஹ்ரீர்”என்ற குழுவில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணையிலேயே பலரது பின்னணியும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹமாஸ் ஆதரவு நிலை கொண்ட பலர் முதன்மை கட்டுமான நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், மருந்து நிறுவனங்கள், NHS மற்றும் அணுமின் நிலையத்தில் கூட பணியாற்றி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

லண்டனில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் பலஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்பின் பிரித்தானியாவுக்கான தலைவர் அப்துல் வாகிர் என்பவர் வடமேற்கு லண்டனில் வாஹித் ஷைதா என்ற பெயரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலை, இஸ்ரேலின் முகத்தில் விழுந்த குத்து என்றே மருத்துவர் வாஹித் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து ஹிஸ்புத் தஹ்ரீர் குழுவானது முன்னெடுத்த லண்டன் பேரணியில், அரபு நாடுகள் தங்கள் பலம் வாய்ந்த ராணுவத்தை இஸ்ரேலுக்கு எதிராக களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் இந்தப் பேரணியில் தான் புனிதப் போர் என்ற ஜிஹாத் முழக்கம் முதன்முறையாக எழுப்பப்பட்டது. ஆனால் இதே குழு சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் களமிறங்கலாம் என்ற அச்சமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

பொறியியல் பட்டதாரியான லுக்மான் முகீம் தமது சமூக ஊடக பக்கத்தில் ஹமாஸ் தாக்குதலை குறிப்பிட்டு, எங்களை பெருமைப்படுத்திய தருணம் என பதிவு செய்திருந்தார்.

இவரே அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் இன்னொரு முக்கிய உறுப்பினரான ஜமால் அர்வுட் நிதி தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பினை தடை செய்ய பிரித்தானிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் அளிக்கப்பட்டாலும், இதுவரை அந்த அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...