rajitha 1 1
ஏனையவைஇலங்கைசெய்திகள்

சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித

Share

சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித

நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (20) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சையை வழங்குவதற்கான வசதிகள் இன்மையால், சிகிச்சை பெறாமலேயே பலர் உயிரிழந்துள்ளனர் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இத்தகைய நிலைமையில், அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு உயர்மட்டத்திலிருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சுமார் 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...