VideoCapture 20211106 221732
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிணற்றில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!!

Share

வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த மாணவன் (பிரபாகரன் ரஜீவன் – வயது 18) ஒருவன் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் சிரமதானம் செய்வதற்கு நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறித்த மாணவன், சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் நீந்துவதற்கு சென்றிருந்தார்.

நண்பர்களுடன் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவர் கிணற்றில் மூழ்கியதை அவதானித்த அவரது நண்பர்கள், அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாணவன் மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...