21 614463488648d
செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

Share

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபரின் உறவினர்கள் இறுதிக் கிரியை ஒன்றில் அவர் கலந்துகொண்டார் எனவும், அங்கு அவருடன் சிலர் முரண்பட்டனர் எனவும், அவர்களே அவரை கொலை செய்தனர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த மரணம் கொலை எனவும், கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

21 61446348aa1e6 21 61446348c6311 21 614463484c957 21 614463485f316 21 6144634831b4c

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...