ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி

Share

ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி

ரஷ்ய போரில் தங்களது தாக்குதல் மூலம் ஐரோப்பாவிற்கு யாரும் படையெடுத்து வரமாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம் என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘இப்போது உக்ரைனில், எங்கள் நிலத்தில், நமது வானில், நமது பொதுவான பாதுகாப்பிற்கான அடிப்படை ரஷ்ய அச்சுறுத்தலின் சிக்கலை தீர்க்க முடியும்.

இந்தப் போரில் எங்களது தாக்குதலானது, ஐரோப்பாவிற்கு மேலும் படையெடுப்பாளர்கள் வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. சுதந்திரம் நிச்சயமாக நிலைத்து நிற்கும், இதுவே நமது வீரர்கள் மற்றும் நமது வீரர்களுக்கு உதவும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உறுதி செய்யும் முக்கிய விடயம்’ என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...