tou
இலங்கைஉலகம்செய்திகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் – இலங்கைக்கு 12வது இடம்

Share

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 இன் படி பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.

கடந்த வருடம் 127 ஆவது நிலையிலிருந்த  இலங்கை இவ்வருடம் சற்று முன்னேறியுள்ளது.

சமுதாய ஒருங்கிணைப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், சமுதாயத்தின் பெருந்தன்மை மற்றும் ஊழல் அற்ற தன்மை போன்ற முக்கிய 6 காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்கள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளை கணித்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் பல நெருக்கடிகள் இருந்தாலும் உலக வாழ்க்கை திருப்தி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னிருந்ததைப் போல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடனான பின்லாந்து நாடு அதன் விரிவான நலன்புரி அமைப்பு, அதிகாரிகள் மீதான அதிக நம்பிக்கை மற்றும் அதன் 5.5 மில்லியன் மக்களிடையே குறைந்த அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.

ரஷ்யாவுடனான போர் நிலைமையிலும் கூட உக்ரேனின் நிலை 98 இலிருந்து 92 ற்கு முன்னேறியிருந்தாலும் அதன் மொத்தப் புள்ளி 5.084 இலிருந்து 5.071 ற்கு குறைந்துள்ளது.

பேராசிரியர் மற்றும் அறிக்கையின் ஆசிரியரான ஜன் இமானுவெல் டி நீவ், ”உக்ரேனின் துன்பம் மற்றும் சேதத்தின் அளவு” என்ற அறிக்கை கடந்த ஆண்டு படையெடுப்பின் பின் வெளிவந்தாலும்   உக்ரைன் முழுவதுமாக சக உணர்வில் அசாதாரண உயர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உலக மகிழ்ச்சி அறிக்கை முதன் முதலாக 2012 இல் மக்களின் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார சமுதாய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

மேலும் குறித்த அறிக்கையில் இலங்கையின் அயல் நாடாகிய இந்தியா 126 ஆவது இடத்திலும் அதேவேளையில் பாகிஸ்தான் 108 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 847fd5d695
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கினிகத்தேனையில் அதிர்ச்சி: 11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – மூன்று சிறுவர்கள் விளக்கமறியலில்!

கினிகத்தேனை பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அவரது...

26 696f67e3b313d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை மீளாரம்பம்: நோயாளிகளின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan)...

24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு...

Archuna 1
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே...