tou
இலங்கைஉலகம்செய்திகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் – இலங்கைக்கு 12வது இடம்

Share

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 இன் படி பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.

கடந்த வருடம் 127 ஆவது நிலையிலிருந்த  இலங்கை இவ்வருடம் சற்று முன்னேறியுள்ளது.

சமுதாய ஒருங்கிணைப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், சமுதாயத்தின் பெருந்தன்மை மற்றும் ஊழல் அற்ற தன்மை போன்ற முக்கிய 6 காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்கள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளை கணித்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் பல நெருக்கடிகள் இருந்தாலும் உலக வாழ்க்கை திருப்தி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னிருந்ததைப் போல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடனான பின்லாந்து நாடு அதன் விரிவான நலன்புரி அமைப்பு, அதிகாரிகள் மீதான அதிக நம்பிக்கை மற்றும் அதன் 5.5 மில்லியன் மக்களிடையே குறைந்த அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.

ரஷ்யாவுடனான போர் நிலைமையிலும் கூட உக்ரேனின் நிலை 98 இலிருந்து 92 ற்கு முன்னேறியிருந்தாலும் அதன் மொத்தப் புள்ளி 5.084 இலிருந்து 5.071 ற்கு குறைந்துள்ளது.

பேராசிரியர் மற்றும் அறிக்கையின் ஆசிரியரான ஜன் இமானுவெல் டி நீவ், ”உக்ரேனின் துன்பம் மற்றும் சேதத்தின் அளவு” என்ற அறிக்கை கடந்த ஆண்டு படையெடுப்பின் பின் வெளிவந்தாலும்   உக்ரைன் முழுவதுமாக சக உணர்வில் அசாதாரண உயர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உலக மகிழ்ச்சி அறிக்கை முதன் முதலாக 2012 இல் மக்களின் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார சமுதாய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

மேலும் குறித்த அறிக்கையில் இலங்கையின் அயல் நாடாகிய இந்தியா 126 ஆவது இடத்திலும் அதேவேளையில் பாகிஸ்தான் 108 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...