C8ZJcYb6B5bEPUF4L1de 1
இலங்கைஉலகம்செய்திகள்

அமெரிக்காவில் இலங்கை மாணவருக்கு கிடைத்த கௌரவம்!

Share

அமெரிக்காவில் இலங்கை மாணவருக்கு கிடைத்த கௌரவம்!

அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த டிலான் மஹேன் குணரத்ன 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்டக் கல்லூரி மாணவருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

‘தென்மேற்கு சட்டக் கல்லூரியின்’ பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு டிலான் மகேன் குணரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தென்மேற்கு சட்டக் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவதற்கு இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

கனடாவில் பிறந்த டிலான் மஹேன் குணரத்னவின் பெற்றோர் இலங்கையர்கள். டிலான் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கால் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதன்பிறகு கனடாவின் டொராண்டோவில் ‘ஒய்டிவி’ சனலில் பணியாற்றினார். 75,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையை பெற்று ‘தென்மேற்கு’ சட்டக்கல்லூரியில் நுழைந்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...