500x300 1724418 ba275 virus subvirus of omicron virus 1
இந்தியாஉலகம்செய்திகள்

சத்தமின்றி பரவும் ஒமைக்ரோனின் துணை வைரஸ்!

Share

ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2.75 வைரஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதாகும். இந்த புதிய வகை வைரஸ், இந்தியாவில் மராட்டியம், கர்நாடகம், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ், பிஏ.2. வைரசின் இரண்டாம் தலைமுறை வைரஸ் ஆகும். இது நமது நாட்டில் தொற்று பெருக்கத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா, இது வேகமாக பரவுகிற ஆபத்தைக் கொண்டுள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு பதில் அளிக்கிற வகையில் நம்பிக்கையூட்டும் தகவல்களை மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவை வருமாறு:-

* தற்போது உலகமெங்கும் ஒமைக்ரான் வகை வைரஸ்கள் உலகளவில் பரவி வருகின்றன. பிஏ.2. வைரஸ், பிஏ.1 வகை வைரசை மாற்றி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

* இந்தியாவில் பிஏ.2.75 வைரஸ், குறைந்த அளவில்தான் பரவலில் உள்ளது. இதுவரை அது நோய் தீவிரத்தை ஏற்படுத்த வில்லை. பரவலையும் அதிகரிக்கவில்லை.

* பிஏ.2 பரம்பரை வளர்ச்சி அடைந்து வருவதால், அதன் துணைப் பரம்பரைகள் இப்போது தனித்துவமான மாறுபாடுகளின் தொகுப்புடன் உருவாகி வருகின்றன. பிஏ.2.75 என்பது பிஏ.2-ன் ஒத்த துணை பரம்பரை ஆகும்.

* இந்த துணை பரம்பரை வைரஸ் பரவல்களையும், பிற ஒமைக்ரான் துணை பரம்பரை வைரஸ்களையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வர வேண்டியது முக்கியம் ஆகும். மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைகளை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....