உலகம்செய்திகள்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

Share
pulamaippiththan
Share

பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார் .

1935-ம் ஆண்டு கோவையில் பிறந்து ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1968ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இப் படத்தில் இவர் எழுதிய “நான் யார், நான் யார்” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகவுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை எனும் பாடலை எழுதியவரும் இவரே.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை புலமைப்பித்தன் நான்கு தடவைகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...