Flag of Italy.svg
உலகம்செய்திகள்

வரட்சியால் இத்தாலியில் அவசரநிலைப் பிரகடனம்!

Share

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் போ நதியைச் சூழவுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறையை கையாள்வதற்காக இந்தப் பிராந்தியங்களுக்கு 38 மில்லியன் டொலர் அவசர நிதி வழங்கப்படுவதாகவும் இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வரட்சி இத்தாலியின் 30 வீதத்துக்கும் அதிகமான விவசாய உற்பத்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு விவசாய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பங்கீட்டு முறையில் நீரை விநியோகிப்பது குறித்து பல மாநகர சபைகளும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

குளிர் மற்றும் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான சூடான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைவீழ்ச்சி வடக்கு இத்தாலியில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலை அசாதாரண முறையிலும் அதிகாரங்களைக் கொண்டும் நிர்வகிப்பதற்காகவுமே அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...