16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,302,185 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 1,165,094 ஆகவும் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 3,808,235 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 3,814,313 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முதல் காலாண்டில் 8,461,936 ஆக இருந்த நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகை, இரண்டாவது காலாண்டில் 8,491,296 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையை விட செயலற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...