23 649c1ba3df5c0
உலகம்செய்திகள்

வட கொரியாவின் அச்சுறுத்தல் – பதிலடி கொடுக்க தயாராகும் தென் கொரியா

Share

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ட்ரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், ட்ரோன்களை உருவாக்குவதற்கான உத்தரவில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் நேற்று (27) கையெழுத்திட்டார்.

அதன்படி ட்ரோன்கள் தயாரிக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும், சுமார் 10 ட்ரோன்கள் வரை வடகொரியா மீது செலுத்தப்படும் எனவும் கருதப்படுகிறது.

பின்னணி

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தொடர் ஏவுகணை சோதனை, ட்ரோன் தாக்குதல் போன்றவற்றை வடகொரியா நடத்தி வருகின்ற நிலையில், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.

இதற்கு வடகொரியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் சியோல் ஆகிய பகுதியில் வடகொரியா 5 டிரோன் தாக்குதலை நடத்தியது.

இதனை தென்கொரிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்திய போதிலும், இந்த சம்பவம் அங்கு போர்ப் பதற்றத்தை அதிகரித்தது.

இதனையடுத்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ட்ரோன்களை உருவாக்க தென்கொரியா முடிவு செய்துள்ளதோடு, இதற்கான கொள்கை கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மைல்கல்

இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,

“ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் போர்க்களத்தில் முறையாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடகொரியாவின் போர் நடவடிக்கைகளை கண்காணிக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என கூறப்பட்டு உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...