ஜெலன்ஸ்கி
உலகம்செய்திகள்

கூடுதல் ஆயுதங்கள் தேவை! – உக்ரைன் ஜனாதிபதி அவசர கோரிக்கை

Share

ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எந்தவொரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது என்றும் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் ஒரு சதவீத ஆயுதங்கள் மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#World News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...