Birds
உலகம்செய்திகள்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழப்பு!

Share

பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரம் கொக்குகள் உயிரிழந்துள்ளன.

வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில், இது வரலாற்றிலேயே மிக மோசமான வன உயிரின பேரழிவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் விதமாக ஆயிரக்கணக்கான கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள், ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், இம்முறை சுமார் 30 ஆயிரம் கொக்குகள் தங்கியிருந்ததாகவும், அவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கொக்குகளை கழுகு உள்ளிட்ட பறவைகள் உண்டால் பறவைக் காய்ச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...