tamilni 79 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

Share

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்குவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவை சந்திக்க நெரிடும் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி ‘இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன என்றும், இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டும் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகின்றது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.

இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...