tamilni 78 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை

Share

இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மற்றும் கல்வி அமைச்சர் பிரேமஜயந்தவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று(6) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை மாணவர்களின் கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜீலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பேராதனை மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையில் நடைபெறவிருக்கும் ஆசிரியர் பரிமாற்றம் உட்பட கல்வி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினோம்”.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து, மதிய உணவுகள், கல்வியறிவை ஊக்குவித்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான ஆங்கில கல்வி அறிவு மற்றும் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்த்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா செயற்படவுள்ளதாக ஜீலி சங் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு துணை நிற்கும் எனவும் அவர் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...