17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

Share

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த சில பிரபலங்கள் மீது தற்போது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், திரையுலகத்தில் நம்பிக்கை இழப்பும்,கவலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் “நம்மட ஹீரோக்கள் இப்புடியா?” என்ற ஏமாற்றம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த சர்ச்சையில் தற்போது மிகுந்த விவாதத்துக்குள்ளானவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா.

ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பிடித்த நடிகராக விளங்கியவர் ஸ்ரீகாந்த். சமீப காலமாக வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அத்துடன், நடிகர் கிருஷ்ணாவும் பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார்.

தற்பொழுது இருவருமே போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்பட்டனர். இதனிடையே அவர்களது கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில்,போதைப்பொருள் வழக்குகள் மற்றும் நடிகர்கள் பற்றிய கேள்விக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். அதன்போது மாரி செல்வராஜ், “யாரு பண்ணாலும் தப்பு, தப்பு தானே. நடிகர் என்றால் தப்பு பண்ணலாமா? சட்ட விரோதமா செய்யுற எல்லாமே தப்பு தான்.” எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....