tamilni 80 scaled
இலங்கைசெய்திகள்

சட்டங்களை மீறி செயற்படுவதற்கு துணிய வேண்டும்

Share

சட்டங்களை மீறி செயற்படுவதற்கு துணிய வேண்டும்

மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக அரசாங்கத்தின் குறித்த முயற்சிகளை முறியடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள்” எனும் தொனிப்பொருளில் நேற்று (6)நடைபெற்ற மக்கள் கருத்தரங்கில் உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நாட்டில் மாற்றமொன்று ஏற்பட்டதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த மாற்றத்தை முழுமையடைய விடாது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் அடக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், குறித்த சட்டங்கள் இல்லாமல் ஏற்னவே நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு அவர்களால் மக்களை அடக்க முடியுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...