china 1
இந்தியாஉலகம்செய்திகள்

சீன பொருட்களை வாங்க இந்தியர்கள் மறுப்பு!

Share

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆடைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற சில துறைகளில் சீன பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 11 சதவீதம் பேர் சீன பைகள், ஆடைகள், உதிரிப்பாகங்களை வாங்கினார்கள்.

அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீன வாகன உதிரிப்பாகங்களை வாங்கிய 7 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடமாக எதையும் வாங்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீன பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை கால தேவை, எலக்ட்ரானிக் பொருட்கள் எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

#India #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...