china 1
இந்தியாஉலகம்செய்திகள்

சீன பொருட்களை வாங்க இந்தியர்கள் மறுப்பு!

Share

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆடைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற சில துறைகளில் சீன பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 11 சதவீதம் பேர் சீன பைகள், ஆடைகள், உதிரிப்பாகங்களை வாங்கினார்கள்.

அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீன வாகன உதிரிப்பாகங்களை வாங்கிய 7 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடமாக எதையும் வாங்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீன பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை கால தேவை, எலக்ட்ரானிக் பொருட்கள் எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

#India #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....