china 1
இந்தியாஉலகம்செய்திகள்

சீன பொருட்களை வாங்க இந்தியர்கள் மறுப்பு!

Share

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆடைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற சில துறைகளில் சீன பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 11 சதவீதம் பேர் சீன பைகள், ஆடைகள், உதிரிப்பாகங்களை வாங்கினார்கள்.

அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீன வாகன உதிரிப்பாகங்களை வாங்கிய 7 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடமாக எதையும் வாங்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீன பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை கால தேவை, எலக்ட்ரானிக் பொருட்கள் எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

#India #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...