7 14
உலகம்செய்திகள்

டெல்லி விமான சேவையில் பாதிப்பு.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இந்திய (India) – பாகிஸ்தான் (Pakistan) போர் பதற்றம் காரணமாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து சீராக நடப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிஉயர் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு விமான நிலைய நிர்வாக சேவை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம், “வளர்ந்து வரும் வான்வெளி இயக்கவியல் மற்றும் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தால் கட்டளையிடப்பட்ட அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகளின் வெளிச்சத்தில், விமான அட்டவணைகளில் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் நீண்ட காத்திருப்பு நேரங்கள் இருக்கலாம்” என்று கூறியுள்ளது.

எனவே, பயணிகள் முன்கூட்டிய திட்டமிடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தாமதங்களைச் சமாளிக்க பயணிகள் முன்கூட்டியே வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...

21 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 2025 இல் உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது: அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தகவல்!

சர்வதேச பொருளாதாரத் தரவுகளின்படி, கடந்த கால சவால்களை முறியடித்து இலங்கை 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க...

20 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மே 25 வரை தொடரும் கடும் வெப்பம்: எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலையானது, எதிர்வரும் மே மாதம்...

19 11
செய்திகள்உலகம்

ஈரானிய போர்க்கப்பல் மீதான தாக்குதல்: “தகுந்த பதில் வழங்கப்படும்” – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’ (IRIS Dena)...