8 14
இலங்கைசெய்திகள்

சஜித் – ரணில் மோதல்! கைநழுவும் கொழும்பு மாநகர சபை

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியுறும் கட்டத்தை அடைந்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தெரிவாகியுள்ளது.

எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் 69 ஆசனங்கள் வெல்லப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றலாம் எனும் நிலை உள்ளது.

இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகர சபை அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினால் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது.

எனினும் ரணில் விக்கிரமசிங்க மீதுள்ள தனிப்பட்ட பகைமையுணர்வு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பமில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...