உலகம்செய்திகள்

ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை

Share

ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை

ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவை வெளிபடுத்தி வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவத்தில் நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.

அந்த உரையில் ஹமாஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இரண்டும் தீவிரவாதம் மற்றும் கொடுங்கோன்மையின் அச்சுறுத்தல் கொண்டவை.

இரண்டுமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதையே இலக்காக வைத்துள்ளனர்.

இதனால் ஏற்படும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பரவி அதன் பாதிப்புகள் அதிகரிக்க வைக்கும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அதிகமான நிதியுதவி வழங்க வேண்டும், இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு.

இதனால் அமெரிக்காவின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் இதன் மூலம் பலன் பெறுவார்கள், நமது நட்புறவுகளே நமக்கான பாதுகாப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...